செவ்வாய், 17 மே, 2011
திங்கள், 16 மே, 2011
நட்பிட்டிமுனையில் தொடரும் குடி நீர் பிரச்சினை
நற்பிட்டிமுனை பிரதேசத்தில் குடி நீர் வழங்குவதில் தேசிய நீர் வழங்கல் அதிகார சபை பொடு போக்குடன் செயல் படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு வேளையில் மாத்திரம் குடிநீரை வழங்கும் அதிகார சபை குறைந்தளவு நீரை வழங்குவதால் உயரமான பகுதியை சேர்ந்த ஆலயடி பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் குடி நீர் கூட முறையாக வழங்கப்படுவதில்லை
பல நாட்கள் நீர்பெறாமல் சிரமப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தி கிடைத்த நீர் மீண்டும் இடைநிறுதப்படுவது அம்மக்களின் ஆவேசத்தை தூண்டும் செயலாகும்.
நற்பிட்டிமுனையில் அனுமதியற்ற முறையில் மாடுகள் அறுக்கப்படுகின்றன

நற்பிட்டிமுனை பிரதேச குளக்கட்டுகள், மேட்டுவட்டை போன்ற பிரதேசங்களில் அனுமதியற்ற முறையில் மாடுகள் அறுக்கப்படுவதாலும், அதன் கழிவுகள் அவ்விடத்திலேயே கைவிடப்படுவதாலும் அண்மித்துள்ள குடியிருப்பாளர்கள் பல்வேறு இன்னல்களையும் சுகாதாரச் சீர்கேடுகளையும் அனுபவித்து வருகின்றனர்.
அவ்விடத்திலேயே கைவிடப்படும் எலும்பு, தோல், இரத்தம் போன்ற இன்னோரன்ன பொருட்களை நாய், காகம் போன்றவை அருகிலுள்ள கிணறுகள், கோயில்கள் போன்ற இடங்களுக்கு இழுத்துச் செல்கின்றன. இதன் காரணமாக இப்பிரதேசத்தின் தூய்மை சீர்துலைந்து வருகின்றது.
பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வனவாசம் இவ் வீதியூடாகவே செல்வது வழக்கமாகும். இவ்வாறான செயல்களினால் தமிழ் மக்கள் தமது ஆண்மீக வழிபாடுகளைச் சீரான முறையில் நிறைவேற்ற முடியாதுள்ளதுடன், தமிழ், முஸ்லிம் உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக்கப் படுகின்றது.
ஆகையால் கல்முனை மாநகர சபை முதல்வர், கல்முனைப் பொலிசார், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் அனுமதியற்ற முறையில் மாடு அப்பதைத் தடுத்து நிறுத்தி அப்பிரதேச குடியிருப்பளர்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கோடுகளைப் போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பிரதேச பொது மக்களால் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அவ்விடத்திலேயே கைவிடப்படும் எலும்பு, தோல், இரத்தம் போன்ற இன்னோரன்ன பொருட்களை நாய், காகம் போன்றவை அருகிலுள்ள கிணறுகள், கோயில்கள் போன்ற இடங்களுக்கு இழுத்துச் செல்கின்றன. இதன் காரணமாக இப்பிரதேசத்தின் தூய்மை சீர்துலைந்து வருகின்றது.
பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வனவாசம் இவ் வீதியூடாகவே செல்வது வழக்கமாகும். இவ்வாறான செயல்களினால் தமிழ் மக்கள் தமது ஆண்மீக வழிபாடுகளைச் சீரான முறையில் நிறைவேற்ற முடியாதுள்ளதுடன், தமிழ், முஸ்லிம் உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக்கப் படுகின்றது.
ஆகையால் கல்முனை மாநகர சபை முதல்வர், கல்முனைப் பொலிசார், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் அனுமதியற்ற முறையில் மாடு அப்பதைத் தடுத்து நிறுத்தி அப்பிரதேச குடியிருப்பளர்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கோடுகளைப் போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பிரதேச பொது மக்களால் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, 15 மே, 2011
அபிவிருத்தியில் நற்பிட்டிமுனை புறக்கணிப்பு
பொருளாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நெல்சிப் திட்டத்தில் கல்முனை ,சாய்ந்தமருது,மருதமுனை, இஸ்லாமாபாத்,சேனைகுடி, அடங்கலாக ஐந்து அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதிக்கீடு செயப்பட்டுள்ளது இந்த அபிவிருத்தியில் நற்பிட்டிமுனை புறக்கணிப்பு செயப்பட்டுள்ளது, இந்த புறக்கணிப்பு கல்முனை மாநகர சபையினால் செயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, நட்பிட்டிமுனையை சேர்ந்த மூன்று மாநகர சபை உறுப்பினர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை வாக்களித்த மக்கள்தான் கேட்க வேண்டும்.
ஞாயிறு, 1 மே, 2011
மின்னல் தாக்கி நற்பிட்டிமுனை வாசி காயம்
நற்பிட்டிமுனை ஹிஜா கல்வி நிலைய கல்வி சுற்றுலா
நற்பிட்டிமுனை ஹிஜா கல்வி நிலைய கல்வி சுற்றுலாவில் அங்கு கல்வி பயிலும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர் .நிலைய பொறுப்பாளர் டபிள் யு .ஐயூப்கான் ஆசிரியர் தலைமையில் சென்ற ஆசிரியர்களும் மாணவர்களும் இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற பல முக்கிய இடங்களை பார்வை இட்டனர். இதில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
நற்பிட்டிமுனை ஹிஜா கல்விநிலையம் இக்கிராமத்தில் நீண்ட காலமாக கல்வி சேவை வழங்கி வருவது குறிப்பிட தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










