
நற்பிட்டிமுனை பிரதேச குளக்கட்டுகள், மேட்டுவட்டை போன்ற பிரதேசங்களில் அனுமதியற்ற முறையில் மாடுகள் அறுக்கப்படுவதாலும், அதன் கழிவுகள் அவ்விடத்திலேயே கைவிடப்படுவதாலும் அண்மித்துள்ள குடியிருப்பாளர்கள் பல்வேறு இன்னல்களையும் சுகாதாரச் சீர்கேடுகளையும் அனுபவித்து வருகின்றனர்.
அவ்விடத்திலேயே கைவிடப்படும் எலும்பு, தோல், இரத்தம் போன்ற இன்னோரன்ன பொருட்களை நாய், காகம் போன்றவை அருகிலுள்ள கிணறுகள், கோயில்கள் போன்ற இடங்களுக்கு இழுத்துச் செல்கின்றன. இதன் காரணமாக இப்பிரதேசத்தின் தூய்மை சீர்துலைந்து வருகின்றது.
பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வனவாசம் இவ் வீதியூடாகவே செல்வது வழக்கமாகும். இவ்வாறான செயல்களினால் தமிழ் மக்கள் தமது ஆண்மீக வழிபாடுகளைச் சீரான முறையில் நிறைவேற்ற முடியாதுள்ளதுடன், தமிழ், முஸ்லிம் உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக்கப் படுகின்றது.
ஆகையால் கல்முனை மாநகர சபை முதல்வர், கல்முனைப் பொலிசார், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் அனுமதியற்ற முறையில் மாடு அப்பதைத் தடுத்து நிறுத்தி அப்பிரதேச குடியிருப்பளர்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கோடுகளைப் போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பிரதேச பொது மக்களால் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அவ்விடத்திலேயே கைவிடப்படும் எலும்பு, தோல், இரத்தம் போன்ற இன்னோரன்ன பொருட்களை நாய், காகம் போன்றவை அருகிலுள்ள கிணறுகள், கோயில்கள் போன்ற இடங்களுக்கு இழுத்துச் செல்கின்றன. இதன் காரணமாக இப்பிரதேசத்தின் தூய்மை சீர்துலைந்து வருகின்றது.
பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வனவாசம் இவ் வீதியூடாகவே செல்வது வழக்கமாகும். இவ்வாறான செயல்களினால் தமிழ் மக்கள் தமது ஆண்மீக வழிபாடுகளைச் சீரான முறையில் நிறைவேற்ற முடியாதுள்ளதுடன், தமிழ், முஸ்லிம் உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக்கப் படுகின்றது.
ஆகையால் கல்முனை மாநகர சபை முதல்வர், கல்முனைப் பொலிசார், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் அனுமதியற்ற முறையில் மாடு அப்பதைத் தடுத்து நிறுத்தி அப்பிரதேச குடியிருப்பளர்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கோடுகளைப் போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பிரதேச பொது மக்களால் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக