நற்பிட்டிமுனை பிரதேசத்தில் குடி நீர் வழங்குவதில் தேசிய நீர் வழங்கல் அதிகார சபை பொடு போக்குடன் செயல் படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு வேளையில் மாத்திரம் குடிநீரை வழங்கும் அதிகார சபை குறைந்தளவு நீரை வழங்குவதால் உயரமான பகுதியை சேர்ந்த ஆலயடி பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் குடி நீர் கூட முறையாக வழங்கப்படுவதில்லை
பல நாட்கள் நீர்பெறாமல் சிரமப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தி கிடைத்த நீர் மீண்டும் இடைநிறுதப்படுவது அம்மக்களின் ஆவேசத்தை தூண்டும் செயலாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக