செய்திகள்

வியாழன், 30 ஜூன், 2011

நற்பிட்டிமுனைஅம்பலத்தடி விநாயகர் ஆலய பிரமோற்சவப் பெருவிழா

அம்பலத்தடி விநாயகர் ஆலய பிரமோற்சவப் பெருவிழா

நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் .

ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவப் பெருவிழா அண்மையில் ஆரம்பமானது


பிரமோற்சவப் பெருவிழாவின் கிரிகைகளை ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்களின் நல்லாசியுடன், ஆலய பிரதமகுரு, உற்சவகுரு. ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.க.கு.மோஹனாநந்தக் குருக்கள், சிவஸ்ரீ.ப.கு.புவனேசராசாக் குருக்கள், இளஞ்சுடர்.சிவஸ்ரீ.பு.கு.சடாட்சர சர்மா, சிவஸ்ரீ.ந.கேதீஸ்வர சர்மா ஆகியோர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.

செவ்வாய், 14 ஜூன், 2011

நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் மற்றும் சின்னம் சூட்டும் விழா

நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய  மாணவத் தலைவர்களுக்கான  நியமனக் கடிதம் மற்றும் சின்னம் சூட்டும் விழா என்பன இன்று கல்லூரி ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது. 
கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கயூம் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில்  கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.டி.தௌபீக் பிரதம அதிதியாகவும் ,கல்முனை  போலிஸ் நிலைய நிருவாக பொறுப்பதிகாரி எம்.ஐ.வாஹிட் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர் 
கடந்த காலத்தில் சீரழிந்த இப்பாடசாலை எனது காலத்தில் சிறந்த நிலைக்கு வர வேண்டும் .அதற்க்கு மாணவர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .எமது பாடசாலைக்கு  இருந்து வரும் அவப் பெயர் நீங்க வேண்டும்.








கடந்த காலத்தில் பொத்துவில்  தொடக்கம் மருதமுனை வரைக்கும் நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய சாதனை கள்  பறை சாற்றப்பட்டுள்ளது. இவ்வரலாறு மீண்டும் புதுப்பிக்கப்படவேண்டும் என அதிபர்  கயூம் கூறினார்.

வியாழன், 2 ஜூன், 2011

உரிமை கோராத அறிவிப்பு

இன்று நற்பிட்டிமுனை பள்ளிவாசல் ஒலி பெருக்கிகளில் ஒலிபரப்பு செயப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என்ற அறிவிப்புக்கு யாரும் உரிமை கோரப்படவில்லை . நற்பிட்டிமுனை 03 ஆம் பிரிவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மீள் எழுச்சி திட்ட அபிவிருத்தி பணி இடம்பெறவுள்ளதாகவும் இதற்க்கான கூட்டம் சனிகிழமை நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெறவிருப்பதாகவும் 80 %மானவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தி என்ன அபிவிருத்தி செய்யப்படவுள்ளது,இதற்க்கு யார் பொறுப்பு என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.நெல்சிப் திட்டத்தில் நற்பிட்டிமுனை புறக்கணிப்பு செயப்பட்டுள்ளதை மூடி மறைக்க சதி திட்டம் இடம்பெற்றுள்ளதா ?  என மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்.