செய்திகள்

ஞாயிறு, 17 ஜூலை, 2011

கல்முனை பிரதேச பிராந்திய ஊடகவியலாளர்கள்கௌரவிக்கப்பட்டனர்.

கல்முனை மணற்சேனை எம். ஆர். சி (MRC) நிறுவனத்தின் சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச பிராந்திய ஊடகவியலாளர்கள் 16பேர் கடந்த 14.07.2011 ம் திகதி  எம். ஆர். சி நிறுவனத்தின் கல்முனை மணற்சேனை அலுவலகத்தில் வைத்து பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிறுவனத்தின் சமூக சேவை பிரிவின் தலைவர் ஏ. கபூர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற intha நிகழ்வில் இந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சமூக சேவைக்காக பேராசிரியர் கௌரவப்பட்டம் பெற்ற எம். ராஜேஸ்வரன் பிரதேச செயலாளர்களான வி.அழகரத்தினம் எம். எம். நௌபல், கே. லவநாதன் ஆகியோரும் பொறியியலாளர் ஏ. எம். ரிஸ்வி, கே. எல். எம். இஸ்மாயீல், ஐ. எல். அப்துல் பாரி ஆகியோர் ஊடகவியலாளர்களான அலியார் முசம்மில், ஏ. எல். எம். சலீம், வி. ரி. சகாதேவராஜா, எம். ஐ. சம்சுத்தீன், பி. எம். எம். ஏ. காதர், எஸ். பேரின்பராஜா, யு. எம். இஷ்ஹாக், சிறி வேல்ராஜ், எஸ். சிராஜுதீன், எம். சஹாப்தீன், பி.கேதீஸ், ஏ. எஸ். முஜாஹித், எஸ். எம். எம். ரம்ஸான், ஏ. எல். எம். மஜீத், எஸ். துஷ்யந்தன், எம். ஏ. பஜீல் ஆகியோரே கௌரவிக்கப்பட்டவர்.
இதில் எமது  ஊடகவியலாளர்  யு. எம். இஷ்ஹாக்,அவர்களும் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் எமது வாழ்த்துக்களை இவருக்கும் ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக